கொழும்பு துறைமுக நகரத்தில் இடம் பெற்ற இசை கச்சேரியில் கலந்து கொண்ட 24 வயதுடைய இளம் வணிகர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
நிகழ்வு தொடர்பில் கொழும்பு துறைமுக காவல்த்துறையினரால் 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணொளிக் கருவியின் உதவியுடன் நிகழ்வு தொடர்பில் மேலும் நால்வரை கைது செய்ய காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்ய தேடப்படும் நபர்களில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மருமகனும் அடங்குவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளம் வர்த்தகர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் 17 வயதான முன்னாள் காதலியுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் காதலி வேறு ஒருவருடன் வந்ததால் ஐயத்துக்குரிய நபர் கோபமடைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செ.நீருஜன்