இலங்கைக்கு இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு உலக நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்துள்ளது.
வொசிங்டனில் இன்று கூடிய உலக நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது குறித்து நாளை (21) பணிமுறையாக அறிவிக்கப்படும்.
இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக சிறப்பு அறிவிப்பு ஒன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளைய நாளை வெளியிட உள்ளார்.நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இந்த தகவலை வழங்கியுள்ளார்.