இலங்கை செய்திகள்

மின் வெட்டு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

எரிபொருள் நெருக்கடி காரணமாக, வார இறுதியில் மின் வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில், இன்று 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும், நாளை 3 மணித்தியாலங்களும் மின் வெட்டை அமுல்படுத்துமாறு மின்சார சபை கோரியுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் வார இறுதி நாட்களில் மின் வெட்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.

நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5:20 மணி வரை ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,
மாலை 5:20 மணி முதல் இரவு 9:20 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

Related posts

யாழில் உறக்கத்தில் உயிரிழந்த சிறுமி: உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்

Thanksha Kunarasa

பேர்ளின் ரயில் நிலையத்திலும் வந்து குவிகின்றனர் அகதிகள் ! ஜேர்மனிக்குப் பெரும் சவால்!

namathufm

ஹம்பாந்தோட்டையில் இருவர் சுட்டுக் கொலை

Thanksha Kunarasa

Leave a Comment