இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுதலை

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

அவரை 3 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்து மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

தண்டனை சட்டக்கோவையின், பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் அரச ஊழியர்களின் இரகசிய கட்டளைச் சட்டத்தின் கீழ், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரீஜென்சி அரசகுலரட்ணம் மற்றும் தர்ஷன குருப்பு உள்ளிட்டோர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சார்பில் மன்றில் ஆஜராகினர்.

Related posts

அணு விபத்து அல்லது தாக்குதல் நடந்தால் : பிரான்சில் போதியளவு அயோடின்கையிருப்பில் – அமைச்சர் தகவல்

namathufm

றம்புக்கனை சம்பவம்- பொலிஸ் அதிகாரிகள்,மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரசன்னம்!

Thanksha Kunarasa

முன்னாள் ஜனாதிபதி க்கு உத்தியோக பூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு தடை உத்தரவு

namathufm

Leave a Comment