இலங்கை செய்திகள்

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பதற்றம்!

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டன.

காலி முகத்திடலில் பொலிஸ் வாகனங்கள் எதற்காக நிறுத்தப்பட்டன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகள் இன்றி அமைதியாக இடம்பெற்று வந்த நிலையில் இதுவரை குறைந்தளவு பொலிஸ் பிரசன்னமே காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்ததால் பதற்றமான கூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

Thanksha Kunarasa

ரூபாய் 7,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு ! குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 !

namathufm

ஜார்ஜியாவில் ஏப்ரல் 2 ஆம் திகதி இந்து புத்தாண்டாக அறிவிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment