இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமெனவும், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நிதியமைச்சர் அலி சப்ரியும் அமெரிக்கா செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.