இலங்கை செய்திகள்

ரோஜாவுடன் சென்ற யுவதிக்கு கண்ணீர்ப்புகை தாக்குதல்

மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று (08) பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியொன்று இன்று பிற்பகல் களனியிலிருந்து பாராளுமன்றத்தை சென்றடைந்தது.

எனினும் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது இளம் பெண் ஒருவர் கையில் ரோஜாவுடன் பொலிஸாரை நோக்கி நடந்து சென்றார்.

அவர் குறித்த ரோஜாவை ஒரு பொலிஸ் அதிகாரியிடம் கொடுத்த நிலையில் பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Related posts

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா குற்றசாட்டு

namathufm

இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்த கட்டார் உறுதி!

namathufm

பிரான்ஸ் மாநகர சபையில் யாழ் மாநகர சபை முதல்வர்

Thanksha Kunarasa

Leave a Comment