இலங்கை செய்திகள்

புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் பொருட்கள்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை தற்போதைய சந்தை விலைக்குக் குறைவான சலுகை விலையில் வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அரிசி, பால் மா, சீனி மற்றும் தேயிலை அடங்கிய இந்த லங்கா சதொச நிவாரணப் பொதி 1950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையை விட நுகர்வோர் 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தப் புத்தாண்டு நிவாரணப் பொதி நாளை முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிவாரணப் பொதியில்,5 கிலோ நாட்டு அரிசி 05 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால் மா, 1 கிலோ சிவப்பு சீனி, 100 கிராம் தேயிலை ஆகியவை உள்ளடங்குகின்றன.

Related posts

நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கும்?

Thanksha Kunarasa

இலங்கை, கொழும்பு பங்குச் சந்தை சில நிமிடங்களுக்கு நிறுத்தம்.

Thanksha Kunarasa

முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை – அனுமதிக்க முடியாதென தீர்மானம்

Thanksha Kunarasa

Leave a Comment