ஜனாதிபதி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான வரைவை விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி சமர்பிக்கும் .
நிறைவேற்று ஜனாதிபதியே பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தியதாகவும், இரசாயன உரங்களை ஜனாதிபதி தன்னிச்சையாக தடை செய்ததன் காரணமாகவே உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.