உலகம் செய்திகள்

தரையிறக்க கட்டுப்பாட்டில் கோளாறுஏயார் பிரான்ஸ் விமானம் அருந்தப்பு ! காணொளி இணைப்பு

நியூயோர்க்கில் இருந்து பாரிஸ் வந்த ‘ஏயார் பிரான்ஸ்’ ‘போயிங்’ விமானம் ஒன்று பாரிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய சமயத்தில் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும் சமயம் அதன் தரையிறக்கக் கட்டுப்பாடு செயலிழந்ததாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் ஜோன் எப் கென்னடி (John-Fitzgerald-Kennedy Airport) விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை பாரிஸ் றுவாஸி விமான நிலையத்தில் (Roissy-Charles-de-Gaulle) இறங்கிய”போயிங் 777″ (Boeing 777) விமானமே பெரும் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

பொதுவாக விமானங்கள் தரையிறங்கும் சமயத்தில் ஏற்படுகின்ற கோளாறுகளின் போது விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம். விமானிகளுக்கும் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையிலான உரையாடல்களில் விமானி பதற்றமடைந்து பேசிய வீடியோக் காட்சி ‘யூரியூப்’ தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 200 அடி உயரத்தில் பறக்கையில் அதன் தரையிறங்கும் தொழிற்பாடு கட்டுப்பாட்டை இழந்ததில் விமானம் இறங்க வேண்டிய திசைக்கு எதிராக இடப் பக்கமாகத் திரும்பியுள்ளது. விமானி தனது மிகையான முயற்சியால் (managed to overshoot) விமானத்தை அது ஏனைய விமானங்களுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக விமான நிலையத்தின் மறு பக்கத்தில் உள்ள மற்றொரு ஓடு பாதையில் அவசரகட்டத் தரையிறக்கத்தை மேற்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புலனாய்வு மற்றும் சிவில் விமானப் பாதுகாப்புப் பகுப்பாய்வுப் பணியகம் (Bureau of Investigation and Civil Aviation Safety Analysis – BEA) விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. ஏயார் பிரான்ஸ் நிறுவனத்தின் இந்த போயிங் விமானம் 17 ஆண்டுகளுக்கு முன்பு சேவையில் சேர்க்கப்பட்டது என்றும் அது போன்ற விமானங்களுக்குப் பதிலாக தற்சமயம்”ஏயார் பஸ்-350″ ரகவிமானங்கள் பதிலீடு செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

உலகக் கோப்பையில் முடிவுக்கு வந்த பிரேசிலின் கனவு !

namathufm

பசிலுக்கு தடுப்பூசி போடப்படவில்லை

Thanksha Kunarasa

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

namathufm

Leave a Comment