இலங்கை செய்திகள்

பாராளுமன்றில் கோட்டாவுக்கு ஆதரவாக பேசிய எம் பிக்கு 5000 ரூபா நீட்டிய சாணக்கியன் எம்பி!

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் சபையில் உரையாற்றும் போது அவர் முன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை நீட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் சபையில் பெரும் கூச்சல் ஆரவாரம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், தான் நாட்டு மக்களுக்காகவே பேச வந்துள்ளதாகவும், டயஸ்போராவின் பணத்தை பெறுபவர்களுக்காக பேச வரவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்வை பேச இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு சபாநாயகர் அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

காலி வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

Thanksha Kunarasa

இலங்கையில் கணக்கில் கொள்ளப்படாத ஆபத்தான நோய்!

Thanksha Kunarasa

Leave a Comment