இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிக்கு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.