இலங்கை செய்திகள்

சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய பதவி விலக மறுப்பு ! அமைச்சர் சிலர் நாட்டை விட்டு தப்பியோடம்!

சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டார் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் காட்டும் எந்தவொரு குழுவிற்கும் அரசாங்கத்தை ஒப்படைக்க அரச தலைவர் தயாராக இருக்கிறார்” எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தற்போதும் கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மக்களிடம் இருந்து வெளியான எதிர்ப்பையடுத்து அமைச்சரவை அமைச்சர்கள் பலர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிஸ்ஸங்க சேனாதிபதி போன்ற சிலர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

Related posts

காலி முகத்திடல் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று யாழில் தீப்பந்த போராட்டம்!

Thanksha Kunarasa

கச்சதீவில் புத்தர் சிலை எவ்வாறு ? உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

namathufm

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக இருக்கும் பொது இடங்கள் குறித்து அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

namathufm

Leave a Comment