மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 21 பேர் நேற்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 15 பேருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் 6 பேர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.