இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பயங்கரவாதி இல்லை – யாழில் ஒருவர் போராட்டம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனத் தெரிவித்து அவரது புகைப்படத்தை தாங்கியவாறு யாழில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுப்பிரமணிய பூங்கா முன்றலில் இன்று காலை 7.30மணி தொடக்கம் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஏன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார் – என்ன காரணத்திற்காக அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார் – அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்திருப்பார். ஆனால் இலங்கையில் இருந்த அரசியல் பின்னணி மற்றும் ஏதோ ஒரு சூழ்ச்சியின் காரணமாகவே அவர் பயங்கரவாதி என பெயர் குறிப்பிடப்படும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இனியும் வடக்கிலிருந்து ஒரு விடுதலைப் புலிகளின் தலைவரைப் போல் ஒருவர் உருவாகும் நிலைமையினை நாங்கள் ஏற்படுத்தக் கூடாது.

இனி பிறக்கும் குழந்தைக்கு நாங்கள் சயனைட் குப்பியை கொடுக்காது வடக்கு – தெற்கு மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு விடுதலைப் புலிகளின் தலைவர் போன்றவர்களை நாங்கள் உருவாக்காது தடுக்க முடியும். அத்துடன் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் தான் என்றார்.

Related posts

ஐஎம்எப், உலக வங்கிகளின் அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டம்

Thanksha Kunarasa

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

Thanksha Kunarasa

ஜனாதிபதி மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை! மஹா சங்கத்தினர் பெருமிதம்

namathufm

Leave a Comment