சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
அதிபரின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகளவான விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. அதிபரின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது – இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.