உலகம் செய்திகள்

போரைத் தீவிரமாக்கும் முயற்சிக்கு ஐரோப்பா அடிபணிந்து விட கூடாது – பிரான்ஸ் அதிபர் மக்ரோன்.

பைடனின் போலந்துப் பேருரைக்கு எதிராக மக்ரோன் ஆட்சேபக் கருத்து போரை மேலும் தீவிரமாக்கத் தூண்டுகின்ற “செயல்கள்”, “வார்த்தைகள்” தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார்.

ரஷ்ய அதிபர் புடினை “சர்வாதிகாரி””கசாப்புக் கடைக்காரர் “என்று வர்ணித்து ஜோ பைடன் போலந்து நாட்டில் கூறிய வார்த்தைகளுக்கு எதிராகவே மக்ரோன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கிறார். ” இது போன்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தப் போவதில்லை. ஏனெனில் நான் புடினோடு தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகிறேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“உக்ரைனில் ரஷ்யா தொடங்கியுள்ள போரை நாங்கள் போருக்குச் செல்லாமலேயே நிறுத்த விரும்புகிறோம். இதுவே எங்கள் குறிக்கோள். நாம்அதைச் செய்ய விரும்பினால், நமது வார்த்தைகளையோ செயலையோ தீவிரமாக்கக் கூடாது ” ,”ஐரோப்பியர்கள் சில விரிவாக்கங்களுக்கு அடிபணியக் கூடாது. நமது புவியியல் மற்றும் நமது வரலாற்றை மறந்து விடக் கூடாது. நாங்கள் ரஷ்ய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை” என்று அவர் வலியுறுத்தினார்.

ஐரோப்பா இனி மேலும் மொஸ்கோவிற்கும் வோஷிங்டனுக்கும் இடையிலான பனிப் போர்க் காலச் சூழ்நிலைக்குள் இருக்கப் போவதில்லை “- என்பதையும் மக்ரோன் சுட்டிக் காட்டியுள்ளார். போலந்து தலைநகர் வார்ஸோவில் பைடன் ஆற்றிய பேருரையில் புடினின் அதிகாரத்தை நேரடியாகவும் தகாத வார்தைகளாலும்,உணர்ச்சி வசப்பட்டுச் சாடியுள்ளார் என்று சர்வதேச அவதானிகள் கருதுகின்றனர்.

அரசியல் படைபலம், பொருளாதார நிலைகளில் பார்த்தால் அமெரிக்க அதிபர் இவ்வாறு தனக்கு நிகரற்ற ரஷ்யா மீது கருத்துக்களால் தாக்குவதற்கு அருகதையுடையவர் என்று வேறு சில கொள்கை வகுப்பாளர்கள் கூறுகின்றனர். புடினின் கோபத்தைக் கிளறாமல் அவரை அணுகிப் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகின்ற ஐரோப்பியத் தலைவரான மக்ரோனை அமெரிக்காவின் போர் விரிவாக்கப் பேச்சுகள் பொறுமையிழக்கச் செய்துள்ளன.

புடினுடன் தொடர்பைப் பேணக் கூடிய ஒரே தலைவராகவும் புடின் செவிமடுக்கக் கூடிய குரலுடைய ஒரே நண்பராகவும் விளங்கும் மக்ரோன் ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொடர்பான “யதார்த்த நோக்கத்தில்” மொஸ்கோவை வெளியே விலக்கி வைக்க விரும்பாதவர். தார்மீக ரீதியில் நேட்டோவுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் புடினோடு சமாதான முறையில் இணக்கம் காண்பதிலேயே மக்ரோன் கவனம் செலுத்தி வருகிறார். போருக்கு முன்னரும் பின்னருமான அவரது பல செயற்பாடுகள் இதனையே வெளிப்படுத்துவதாக அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

நேற்று சென்னையை தாக்கிய ‘மேன்டோஸ்’ புயல் !

namathufm

யாழில் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

Thanksha Kunarasa

இலங்கையில், தீ விபத்தில் 5 கடைகள் முற்றாக எரிந்து நாசம்.

Thanksha Kunarasa

Leave a Comment