இலங்கை செய்திகள்

நீடிக்கப்பட்டது மின்வெட்டு நேரம்

நாட்டில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, P முதல் W வரையான வலயங்களில் இன்று மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த வலயங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணிநேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது மின்துண்டிப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்

Thanksha Kunarasa

உக்ரைனியர்களுக்கு மிக விரைவாக வதிவிட அனுமதி! டென்மார்க் முடிவு!!

namathufm

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி! – இலங்கையில் விலை குறைப்பில்லை

Thanksha Kunarasa

Leave a Comment