தற்போதைய 5 மணி நேர மின்வெட்டு மே இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இரண்டு புத்தாண்டு தினங்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனல் மின் நிலையங்கள் முழுமையாக எரிபொருளைப் பெற்ற போதிலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மே மாதம் வரை குறைந்தது இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என்றும் அவர் கூறினார்.