இலங்கை செய்திகள்

எரிவாயு பெறுவதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்.

எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் தெஹிவளையில் இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் குறித்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இன்று காலை முதல் தெஹிவளை காலி வீதி, வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு எடுக்க வந்த மக்களின் நீண்ட வரிசை காணப்பட்டதுடன் இதன் போது முதியவர் மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பின்லாந்திற்கும் ஸ்வீடனுக்கும் ரஷ்யா எச்சரிக்கை

Thanksha Kunarasa

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை : களமிறங்க தயாராகும் முப்படையினர்

Thanksha Kunarasa

ரஷியா கைப்பற்றிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டது

Thanksha Kunarasa

Leave a Comment