இலங்கை செய்திகள்

வானொலி தகராறினால் ஒருவர் வெட்டிக் கொலை

அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (22) பிற்பகல் கிரான்ட்பாஸ், வெஹரகொடெல்ல சந்திக்கு அருகில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்தவருக்கு வானொலியை அடகு வைத்துள்ளார்.

அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வெஹரகொடெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரான்சில் தொற்றுத் அதிகரித்தால் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்!

namathufm

இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கை! கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள்!

Thanksha Kunarasa

ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

Thanksha Kunarasa

Leave a Comment