கம்பஹா சீதுவ பிரதேசத்தில் தலுபொன வீதி ரயில் பாதைக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயது நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.