இரண்டு நாட்கள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, நயினாதீவு நாகபூஷணி அம்மனையும், பௌத்த விகாரையையும் தரிசித்திருந்தார்.

இதேவேளை, பிரதமர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள புத்த விகாரைகள் சிலவற்றிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது