இலங்கை செய்திகள்

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மின்வெட்டு – அட்டவணை

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நாளை (19) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த வலயங்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.

இதேவேளை, P, Q, R, S, T, U, V, W வலயங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்

அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்க்ளில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த வலயங்களில் மாலை 05 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

யுக்ரேன் கொலைகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் சுகாதார அமைச்சர்

Thanksha Kunarasa

நட்பு நாடுகளை எதிரி நாடாக்கி ரஷியா நடவடிக்கை!

namathufm

யாழில் ரயிலில் மோதி சிறுவன் பலி – இருவர் படுகாயம்!

Thanksha Kunarasa

Leave a Comment