உலகம் செய்திகள்

கடத்தப்பட்ட உக்ரைன் நகர மேயர் விடுவிப்பு

உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரை கடந்த வாரம் ரஷிய படையினர் கடத்தி சென்றனர். அவர் ரஷிய படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.

கடத்தப்பட்ட மேயரை மீட்பதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்து வந்தது.

இந்த நிலையில் மெலிட்டோ போல் நகர மேயர் ரஸ்யாவினால் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

அவரை மீட்பதற்காக உக்ரைன் ராணுவம், தான் பிடித்து வைத்திருந்த 9 ரஷிய வீரர்களை திருப்பி அனுப்பியது.

ரஷிய வீரர்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டதையடுத்து உக்ரைன் நகர மேயரை ரஷிய படை விடுவித்து உள்ளது.

Related posts

இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்த கட்டார் உறுதி!

namathufm

உக்ரைனில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்பநாய்

Thanksha Kunarasa

ஔடதங்களின் விலைகளை மீள அதிகரிக்குமாறு கோரிக்கை

Thanksha Kunarasa

Leave a Comment