இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று கொழும்பில்

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் இன்று ஒரு துரதிஷ்டமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த அரசாங்கத்தை இனியும் இந்த நாட்டை ஆள அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து ஆட்சியை விட்டு வெளியேறி, இந்த நாட்டை ஆளக்கூடிய ஒரு குழுவைத் தேர்தல் ஊடாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்துமாறு ஆலோசனை வழங்கவில்லை: பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரத்ன சாட்சியம்

Thanksha Kunarasa

ஜேர்மனியில் எரிவாயு நெருக்கடி!

namathufm

சொந்த நாட்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ரஷ்ய வீர்ரகள்

Thanksha Kunarasa

Leave a Comment