ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகாமையில் அநாதரவாக கிடந்த பெட்டி ஒன்றினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
அம்புல்தெனிய சந்தியில் உள்ள பெட்டியொன்றில் இரண்டு விளையாட்டு துப்பாக்கிகளை மிரிஹான பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
நேற்று காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நேற்று முன்தினம் இரவு நாடகம் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக கொண்டு வந்த பொம்மை துப்பாக்கிகளை நாடக குழுவினர் சம்பவ இடத்தில் விட்டு சென்றதும் தெரியவந்தது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.