நீரில் அடித்துச் செல்லப்பட்டு 16 வயதுடைய மாணவன் உயிரிழப்பு. பதுளை பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அறுவர் பதுளை ஓய ஆற்றுக்கு நீராட சென்ற வேளை ஒருவர் நீரில் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் பதுளை பசறை வீதியில் 3 ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.