இலங்கை செய்திகள்

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அதற்கு ரஷ்ய – உக்ரைன் போர் சூழலும் ஒரு காரணமாகும்.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இலங்கையிலும் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 135,000 ஆகும்.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.125,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Related posts

இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்த கட்டார் உறுதி!

namathufm

யாழில் விபத்து; ஒருவர் பலி!

Thanksha Kunarasa

மருந்து தட்டுப்பாடு – கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்!

Thanksha Kunarasa

Leave a Comment