இலங்கை செய்திகள்

இலங்கை நாணயத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது ,அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது.

தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியில் உன்னிப்பாக கண்காணிக்கும் என்பதுடன் பணவீக்கம், வெளிநாட்டுத் துறை மற்றும் நிதியியல் துறை மற்றும் உண்மைப் பொருளாதார நடவடிக்கையில் உறுதிப்பாட்டினை அடையும் இலக்குடன், பொருத்தமானவாறு மேலதிக வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்குமெனவும் இலங்கை மத்திய வங்கியானது குறிப்பிட்டிருந்தது.

Related posts

பிரான்ஸில் ஓய்வு பெறுவதற்கான வயது எல்லை 65 ஆக அதிகரிக்கும் மக்ரோனின் தேர்தல் முன்மொழிவு !

namathufm

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவியில் இருந்து இராஜினாமா

Thanksha Kunarasa

மாட்டு வண்டியில் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள்

Thanksha Kunarasa

Leave a Comment