இலங்கை செய்திகள்

டீசல் பற்றாக் குறை – பாரவூர்திகள் இயங்காது

டீசல் பற்றாக் குறையால் சுமார் 4,000 கொள்கலன் பாரவூர்திகள் இயங்காது என இலங்கை கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தலைவர் சனத் மஞ்சுளா தெரிவித்தார்.

இதனால், நாட்டுக்கான உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 6,000 கொள்கலன் பாரவூர்திகள் இருந்தாலும், அதில் சுமார் 2000 மட்டுமே இயக்கப்படுகின்றன.

இயங்கும் கொள்கலன் வாகனங்களும் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இயங்குவதால் வெளி மாகாணங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாக அவர் கூறினார்.

Related posts

சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய பதவி விலக மறுப்பு ! அமைச்சர் சிலர் நாட்டை விட்டு தப்பியோடம்!

namathufm

பிரான்ஸ் தேர்தல் களம் : லா-டிபென்ஸ் அரேனா அரங்கில்மக்ரோனின் மாபெரும் பரப்புரைமெக்கின்ஸி ஊழல் விவகாரத்தால் மக்ரோனின் செல்வாக்கில் சரிவா? லூ பென்னுடன் மிக நெருக்கமானபோட்டி!

namathufm

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கம் நாளை (05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும்-உதய கம்மன்பில! நாடு முழுவதும் போராட்டம் !

namathufm

Leave a Comment