உலகம் செய்திகள்

ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் நிறுத்தம்.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். ரஷியாவின் இந்த நியாமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம். ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து விதமான புதிய விற்பனைகளையும் நிறுத்தி வைக்கிறோம்.

உக்ரைன் மீதான ரஷியாவின் இணைய தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் தொடர்ந்து வளங்களை திரட்டி வருகிறோம் என தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் முதல்வர் ஜெயா மரண விசாரணை ஆணையத்தில் மருத்துவர் – வாக்கு மூலம்

namathufm

இலங்கை, கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தகம் மீண்டும் இடைநிறுத்தம்

Thanksha Kunarasa

இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு – மத்திய வங்கி ஆளுநர்.

Thanksha Kunarasa

Leave a Comment