இலங்கை செய்திகள்

யாழ்.விபத்தில் மூத்த விரிவுரையாளர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளரான, கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கல்வியியற் கல்லூரியில் நேற்று இரவு இடம்பெறவிருந்த நிகழ்வுக்காக, கரவெட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தவேளை, கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடி சந்தி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

போதிய வெளிச்சமின்றி உழவு இயந்திர பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தமையால், குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

20ஆவது திருத்தத்தை நீக்குக – மகாநாயக்கர்கள் கூட்டாக வலியுறுத்து!

Thanksha Kunarasa

ரம்புக்கனை கலவரத்தில் இறந்த நபரை நான் நன்கு அறிவேன்: ரணில் வெளியிட்ட தகவல்

Thanksha Kunarasa

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Thanksha Kunarasa

Leave a Comment