உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் நேற்றையதினம் உக்கிரமடைந்ததை அடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் போர் ஆரம்பமாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் இலங்கை, நடுநிலை வகிக்கும் என இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, இலங்கையின் நிலைப்பாட்டை அவர் அறிவித்துள்ளார்.
ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேநேரம், பெலாரஸில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.