உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையடுத்து உலக சந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
பல நாடுகளில் பங்குப் பரிவர்த்தனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன், தங்கம் மற்றும் எரிபொருளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
இதற்கிடையே ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலக சந்தையில் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை, 131,500ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 19,800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது.