உலகம்

💥உக்ரைனில் தாக்குதல்கள் ஆரம்பம்!

தலைநகர் கீவில் சைரன் சத்தங்கள்!!
கிழக்குப் பகுதியில் மோதல் வெடிப்பு!!

🔴வெளித் தலையீடுகளுக்கு
மோசமான பதிலடி கிடைக்கும்!!
மேற்குலகிற்கு புடின் மிரட்டல்!!!

உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் தனது படை நடவடிக்கைகளைத் தொடக்கியிருப்பதாக கிரெம்ளின் அறிவித்திருக்கிறது. ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படைகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அருகே உள்ள உக்ரைன் படைகளது நிலைகளைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றன.

ரஷ்யா அதிபர் அதிகாலை ஆற்றிய விசேட தொலைக்காட்சி உரையில் உக்ரைனின் கிழக்கில் உள்ள படையினரை ஆயுதங்களைக் கைவிட்டுப் பின் வாங்குமாறு எச்சரித்திருக்கிறார்.தனது நடவடிக்கையில் வெளிச் சக்திகள் தலையிட்டால் வரலாற்றில் சந்தித்திராத பதிலடி கிடைக்கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமாகிய ஒடிசாவில் ( Black Sea port of Odessa) பெரும் வான் வழித் தரையிறக்கம் ஒன்றை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவில் வான் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலி எழுப்பப்படும் சத்தங்களைக் கேட்க முடிவதாக அங்குள்ள செய்தியாளர்கள் கூறியிருக்கின்றனர். மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனத் தலைநகர நிர்வாகம் கேட்டிருக்கிறது.

உக்ரைன் வான் பரப்பில் பறக்க வேண்டாம் என்று ஐரோப்பிய வான் சேவைப் பாதுகாப்பு முகவரகம் (European Aviation Safety Agency) விமான சேவைகளுக்கு அவசர ஆலோசனை வழங்கியிருக்கிறது.

ரஷ்யா மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மேற்கு
நாடுகள் எச்சரித்துள்ளன. நேட்டோ நாடுகளது தலைவர்கள் அவசரமாகக் கூடுகின்றனர்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் பாரிஸிலிருந்து குமாரதாஸன்

Related posts

மரியுபோல் நகருக்கான சண்டை தீவிரமாகும் அறிகுறி…! அங்கு சிக்குண்ட மக்களை மீட்க ரஷ்யா குறுகிய போர் நிறுத்தம்!

namathufm

ரஷ்ய நாட்டு கப்பலை கைது செய்த பிரான்ஸ் பொலிஸார்.

Thanksha Kunarasa

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்

Thanksha Kunarasa

Leave a Comment