இலங்கை செய்திகள்

யாழில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது!

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே இன்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேக நபர், 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார்.

Related posts

10,500 உக்ரைனியர்கள் பிரான்ஸில் வதிவிடம் பெற்றனர் !

namathufm

உலகின் முதல் பணக்காரருக்கு சொந்தமாக வீடு இல்லையாம்!

Thanksha Kunarasa

பிரித்தானிய விமானங்கள் பிரவேசிக்க தடை.

Thanksha Kunarasa

Leave a Comment