செய்திகள் விளையாட்டு

ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் மெத்திவ் வேட் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.அணித்தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் ​​தொட​ரை ​கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்ய படையினரின் உறவுகளுக்கு புடினின் செய்தி

Thanksha Kunarasa

ரோஜாவுடன் சென்ற யுவதிக்கு கண்ணீர்ப்புகை தாக்குதல்

Thanksha Kunarasa

ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டுக்கு அருகில் பரபரப்பை ஏற்படுத்திய பெட்டி

Thanksha Kunarasa

Leave a Comment