இலங்கை

பிச்சைக்காரரின் பையில் 4 இலட்சம் ரூபா !

மாத்தறை – ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த யாசகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது கால்சட்டை பொக்கெட்டில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபாக்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். ஹக்மன கொங்கல கிழக்கைச் சேர்ந்த 69 வயதான ஈ.எஸ்.விமலதாச என்பவர் கடந்த 10ஆம் திகதி தான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் திருமணமாகாதவர் என்பதுடன் பாடல் பாடி யாசகம் பெற்று வந்தார். உயிரிழந்தவர் அணிந்திருந்த காற்சட்டையில் உள்ளும் வெளியிலும் பொக்கட்டுக்கள் தைக்கப்பட்டிருந்ததுடன் இதில் இருந்து 384,867.00 ரூபா பணம் காணப்பட்டதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் எவரும் இல்லை எனவும் ஹக்மன பிரதேசத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் இறந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவர் தங்கியிருந்த சிறிய வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர், அங்கிருந்த கறுப்பு நிறத்தில் இருந்த கால்சட்டைகளை பரிசோதித்த போது பல இரகசிய பொக்கெட்டுகளில் ஏராளமான பணம் இருந்தது. அதில் ரூ. 500, ரூ .5,000, ரூ 15000 . என வைக்கப்பட்டிருந்த பணத் தொகைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருளுக்காக காத்திருந்த லொறி மோதியதில் முதியவர் பலி

Thanksha Kunarasa

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது சுகாதார அமைச்சு!

editor

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் ஆரம்பம்.

namathufm

Leave a Comment