சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணம் உரும்பிராய் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற நிலையில் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இளைஞரை மீட்ட காவல்த்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த இளைஞர் இன்று (06.02.2022) சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தார்.
இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சாரங்கன் (31 வயது) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். விபத்து சம்பவம் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.