இலங்கை

தமிழ் பேசும் மக்கள் பெரும் சிரமம் ! பசறை பிரதேச சபை அறிவுறுத்தல்கள் அனைத்தும் சிங்கள மொழியில்..!

பசறை பிரதேச சபை ஊடாக முன்னெடுக்கப்படும் ‘ ஒலிபரப்பு அறிவுறுத்தல்கள் ‘ அனைத்தும் சிங்கள மொழியில் மட்டும் அமைவதினால் மொழி புரியாத தமிழ் பேசும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் .

பசறை பிரதேசத்தில் பிரதேச சபையில் 07 தமிழ் பேசும் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் நிலையில் , 52 வீதம் தமிழ் பேசும் மக்களும் இருந்து வருகின்றனர்.இத்தகைய ஆரோக்கியச்சூழல் இருந்த போதிலும் , தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகின்றன . பிரதேச சபையினால் பசறை பிரதேசத்தில் நடாத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அவசர மேற்கொள்ளப்படும் ஒலிபரப்புக்கள் அனைத்துமே , தனிச்சிங்கள மொழியிலேயே , அமைகின்றன .

இதனால் மொழிபுரியாத தமிழ் பேசும் மக்கள் , குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவே , அவசர அறிவுறுத்தல்கள் பற்றியோ அறிவதற்கு வாய்ப்பில்லை . பிரதேச சபை தமிழ் பேசும் உறுப்பினர்களிடம் இது குறித்து , பிரதேச சபை அமர்வில் முன்வைக்குமாறு கூறினாலும் , அவர்கள் அக்கூற்று , நிராகரிக்கப்படும் வருகின்றனரென்று , பசறை பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

namathufm

மூன்று மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

Thanksha Kunarasa

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment