யாழ்ப்பாணத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றாளர்களாகப் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியானது. இதன்படி, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் 15 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.