இலங்கை

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச்சூடு.

கொடிகாமம் – கலப்பு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்ய முயன்ற வேளை, அகழ்வில் ஈடுபட்டோர் தப்பிச் செல்ல முயன்ற சமயம் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மீது 6 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டபோதும், ஏனையோர் தப்பி ஓடியதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியும் இராணுவத்தினரால் கொடிகாமம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறல் – மனித உரிமைகள் ஆணைக்குழு

Thanksha Kunarasa

நயினாதீவு நாகபூசணி அம்மனை வழிபட்டார் மகிந்த

Thanksha Kunarasa

த.மு.கூ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

Thanksha Kunarasa

Leave a Comment